அதாவது, ஷண்முகத்திற்கு யோசித்து யோசித்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் வைத்து அவனுக்குள் ஒரு ஐடியா தோன்றுகிறது. சௌந்தரபாண்டி வீட்டில் தூக்கம் வராமல் அலைந்து கொண்டிருக்க முத்துப்பாண்டி என்ன ஆச்சு என்று கேட்க எப்படிடா அந்த ஷண்முகம் எனக்கு முன்னாடி கோர்ட் சூட் போட்டு ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை தங்கலாம் என்று ஆவேசப்படுகிறார்.
அதன் பிறகு மறுநாள் சிலம்பாட்டம் குறித்த போஸ்டரை பார்த்த ஷண்முகம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5 லட்சம் ரூபாயை வெல்ல முடிவெடுக்கிறான். இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல வைகுண்டம் கபடி போட்டியிலேயே உன்னை கொல்ல பார்த்தான், வேண்டாம் என்று சொல்ல ஷண்முகம் எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறான்.
Anna Serial
கபடி போட்டியின் போது ட்ரீட்மெண்ட் கொடுக்க பரணி இருந்தா, இப்போ அவ வேற மெடிக்கல் கேம்ப் போயிருக்கா என்று சொல்ல பரணிக்கு தெரிந்தா கலந்துக்க விட மாட்டா, அவ வரதுக்குள்ள இந்த போட்டியில் கலந்துக்கிட்டு பரிசை வென்று காட்டுறேன் என்று சொல்கிறான். அதோடு இல்லாமல் சௌந்தரபாண்டி கூட்டிய கூட்டத்துக்கு சென்று ஏன் மாமா எனக்கு 5 லட்சம் குடுக்கறதா இருந்தா நேரா கொண்டு வந்து கொடுக்க வேண்டியது தானே, எதுக்கு இப்படி தலையை சுத்தி மூக்கை தொடுறீங்க என்று கேட்டு போட்டியில் கலந்து கொள்வதை பற்றி பேசி ஷாக் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Shalini Ajith Gift: அஜித்தின் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த பைக்! இத்தனை லட்சமா? விலையே கேட்டாலே தலை சுத்துதே!